தொடர் மழை பெய்தும் பயன் இல்லை- நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர்
தொடர் மழை பெய்தும் பயனில்லை என்று நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளில் போதிய அளவு நீர் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் தற்போது நிரம்ப தொடங்கியுள்ளன.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக பாதி குளங்கள் முற்றிலும் நிரம்பியுள்ளன. 208 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 461 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் அளவு நிரம்பியுள்ளது.
479 குளங்கள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 800 குளங்கள் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டம் முழுவதும் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது.
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 47.25 அடியாக உள்ளது. சிற்றார் 1ல் 5.08 அடியும், சிற்றார் 2ல் 5.18 அடியும், பொய்கையில் மைனஸ் 3.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 28.22 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1ல் 18.2 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 8, பெருஞ்சாணியில் 3.6, சிற்றார் 2ல் 11.2, அடையாமடை 14, நாகர்கோவில் 11.4, பூதப்பாண்டி 8.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications