தொடர் மழை பெய்தும் பயன் இல்லை- நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர்
தொடர் மழை பெய்தும் பயனில்லை என்று நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளில் போதிய அளவு நீர் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் தற்போது நிரம்ப தொடங்கியுள்ளன.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக பாதி குளங்கள் முற்றிலும் நிரம்பியுள்ளன. 208 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 461 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் அளவு நிரம்பியுள்ளது.
479 குளங்கள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 800 குளங்கள் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டம் முழுவதும் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது.
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 47.25 அடியாக உள்ளது. சிற்றார் 1ல் 5.08 அடியும், சிற்றார் 2ல் 5.18 அடியும், பொய்கையில் மைனஸ் 3.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 28.22 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1ல் 18.2 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 8, பெருஞ்சாணியில் 3.6, சிற்றார் 2ல் 11.2, அடையாமடை 14, நாகர்கோவில் 11.4, பூதப்பாண்டி 8.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications