உடலுக்கு பலமும் ஜீரண சக்தியை தரும் நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்.. ஆன்லைனில்... நாங்க புதுசுங்கோ
சிப்ஸ் என்றதும் பலவிதமான சிப்ஸ் நம் நினைவுக்கு வரலாம் எனினும் நேந்திரம் சிப்ஸ் என்றால் அது சொல்லவா வேண்டும். நேந்திரம் சிப்ஸ் என்றால் பலரும் அது கேரளாவை சேர்ந்தது என்றே எண்ணுவர். கேரளாவில் நேந்திரம் சிப்ஸ் புகழ் பெற்ற நொறுக்கு தீனியாக இருந்தாலும் இந்த புகழ் பெற்ற நேந்திரம் சிப்ஸ் நமது மாநிலத்தில் உள்ள நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்சும் மிக பிரபலம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் என்றால் அது ஒரு தனி சுவை தான். ஏன்னெனில் மற்ற சிப்ஸ்களை காட்டிலும் தென் மாவட்டங்களில் இந்த நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்க்கு மவுசு கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம் தான்.
நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் மட்டும் ஏன் மிக ருசியாக உள்ளது. நாகர்கோவில் கேரளாவை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால் இங்கு தயாரிக்கப்படும் சிப்ஸ் கேரளா வாசம் சேர்ந்தது தான். அது மட்டும் இல்லாமல் இதற்க்கு பயன்படுத்தப்படும் காய்களை குமரி மாவட்டத்திலே வாங்குவதால் இதன் ருசி அதிகம் என்றும் பலர் நம்புகின்றனர். ஏன் என்றால் நெல்லை முதல் குமரி வரை நீங்கள் சென்றால் தெரியும் ரஸ்தாலி, பூவன், கற்பூரவல்லி, மலை, பேயன், பச்சை, பெங்களூர் பச்சை, கதலி, மொந்தன், நேந்திரன், கப்பி, சிறுமலை, செவ்வாழை... என குறைந்தது 25 பழங்களுக்கு மேல் நீங்கள் ருசிக்க முடியும். காரணம் இங்கு விவசாயத்தில் பிரதானமாக வாழை தான் பயிரிடுகிறார்கள். அதனால் தான் இங்கு விளையும் காய்களை பயன்படுத்துவதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த சிப்ஸ் அதிக ருசி பெறுகிறது.
சுவையான நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் செய்முறை :
உங்களுக்கு தேவையான அளவு நேந்திரம் வாழக்காய்களை சிப்ஸ் செய்யும் அன்றே வாங்கி கொள்ளுங்கள். முதலில் நேந்திரம் வாழக்காய்களை தோல் சீவி சிப்ஸ் போல் சீவி வைத்து கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் சீவிய நேந்திரங்காய் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அதை உலர வைக்க வேண்டும்.
முழுவதுமாக உலர்ந்ததும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , உலர்ந்த துண்டுகளை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து இதன் மீது தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி, மிளகு பொடி தூவ வேண்டும். இப்பொழுது சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!!!
நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கும் இடங்களில் இரண்டு வாணலி பயன்படுத்தி ஒன்று மிதமான சூட்டில் பொரித்து பின்னர் அதை எடுத்து அதிக பட்ச சூட்டில் உள்ள இன்னொரு வாணலியில் போட்டு பொரித்து எடுப்பார்கள். வீட்டில் இது சாத்தியம் என்றால் நீங்களும் இது போல செய்து ருசியான நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்சை ருசியுங்கள்.
இத்தனை சுவையான நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் இப்பொழுது நேடிவ்கிரஷ்.காம் (www.nativcrush.com) என்ற இணையதளத்தில் இதை விட சிறந்த தரத்திலும் ருசியிலும் தயாரித்து ஆன்லைனிலும் விற்பனை செய்கிறார்கள். நீங்கள் ஒரு முறை ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் சுவையான மொரு மொரு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்..
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.