தேசிய அளவில் இதுதான் தலைப்பு செய்தி.. பரபரப்பை ஏற்படுத்திய கோபால் கைது!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

யார் அளித்தது
முக்கியமாக நேரடியாக ஆளுநர் பெயரில் இந்த புகார் அளிக்கப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்துதான் புகார் சென்றுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து, ஆளுநரின் செயலாளர் ஒருவர் மூலம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

முதல்முறை இப்படி
முதல்முறை தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. ஆளுநர் மாளிகை பத்திரிக்கையாளர் ஒருவரை கைது செய்ய சொல்லி புகார் அளிப்பதும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.

தேசிய அளவில் கவனம்
இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது தேசிய அளவில் வைரல் ஆகியுள்ளது. இவர் இந்தியா முழுக்க எல்லோருக்கும் தெரிந்த பத்திரிக்கையாளர் என்பதாலும், முக்கியமான இதழ் ஒன்றின் ஆசிரியர் என்பதாலும் இந்த செய்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் இதை அதிக கவனத்துடன் எழுதி வருகிறது.

மீண்டும் பரபரப்பு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் அமைதியானது. தற்போது இந்த கைது காரணமாக இந்தியா முழுக்க அந்த செய்தி குறித்து தகவல் சென்று வருகிறது. பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் நிர்மலா தேவி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications