நக்கீரன் கோபால் கைது ஏன்.. இந்த கட்டுரைதான் காரணம்!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். இவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் காலையில் வந்தார். அப்போது அவரை கிண்டி போலீஸார் கைது செய்தனர்.

புகார் அளித்தனர்
ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்ததாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

விசாரிக்கப்பட்டு வருகிறார்
இவர் தற்போது போலீசால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கோபால் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

என்ன கட்டுரை
நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையொன்றுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். ''4 முறை ஆளுநரை சந்தித்தேன் : நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்'' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைதான் நக்கீரன் கோபால் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு
பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தேசிய அளவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications