தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க மீண்டும் பரோல் கேட்கிறார் நளினி!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, நளினி, உயிரிழந்த தனது தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்தார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் தன்னை விடுதலை செய்யும் என்று நம்புவதாக நளினி தெரிவித்தாராம்.

Nalini requested for her parole again in Vellore jail

சமீபத்தில் நளினியின் தந்தை மரணமடைந்தார். அப்போது நளினி பரோலில் வெளிவந்து, இறுதி சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில், நளினியின் தந்தை ஈமக்காரியங்களுக்காக மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் இன்னும் அதன் மீது காவல்துறை முடிவெடுக்கவில்லை. திங்கள்கிழமைக்குள் பரோல் கொடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய புகழேந்தி திட்டமிட்டுள்ளாராம்.

நளினிக்கு பரோல் கிடைக்குமா என்பது குறித்த தகவல் நாளை தெரியவரலாம் என்கிறது சிறைவட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+