மதசார்பற்ற கட்சிகளுக்கு நல்லகண்ணு அழைப்பு, மதவாத சக்தியை வீழ்த்த ஒன்றிணைவோம்
மதவாத சக்தியை வீழ்த்த ஒன்றிணைவோம் என்று மதசார்பற்ற கட்சிகளுக்கு நல்லகண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி: மதவாத சக்தியை வீழ்த்த நாங்கள் ஒன்று சேந்திருக்கிறோம். இந்த அணி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இருப்பது பாராட்டத்தக்கது.
திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது. மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். இந்த அணி வெற்றிபெற அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
மத்திய அரசு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. பாஜகவின் கொள்கைகள் நாட்டை பின்னோக்கி கொண்டுபோகக் கூடியது. இதை அனைத்து ஜனநாயக மதசார்பற்ற இடதுசாரி கட்சிகள் ஒன்றினைந்து எதிர்த்து மத்திய அரசி வீழ்த்த வேண்டும்" என்று நல்லகண்ணு அறைகூவல் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications