கரூர் மணல் கொள்ளையில் ஈடுபடும் பாஸ்கர் 'ஓபிஎஸ்' உறவினரா? நல்லகண்ணு பரபர புகார்
கரூர்: கரூர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பாஸ்கர் என்பவர் தம்மை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் என கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நலக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மணல் குவாரிகளை மூடக் கோரி நல்லகண்ணு தலைமையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட நல்லகண்ணு உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு, மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனுமதி இல்லாமல் பல குவாரிகள் செயல்படுகின்றன.

ஓபிஎஸ் உறவினரா?
தமிழக அரசின் அனுமதியோடு மணல் கொள்ளை நடக்கிறது. கரூரில் உள்ள மணல் குவாரிகளில் அத்துமீறி செயல்பட்டு வரும் பாஸ்கர் என்பவர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் என சொல்லிக் கொண்டிருப்பதாக தகவல்வந்துள்ளது.

ரூ5,000 கோடி
பாஸ்கர் என்பவர், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் உறவினர் என்பது உண்மையாக இருந்தால், அவரை அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடிரூபாய் வரை மணல் கொள்ளை தாராளமாக நடந்து வருகிறது.

குடிக்க தண்ணீர் கிடைக்காது
இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆறுகள் நஞ்சாகி, எதிர்காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

மேலாண்மை வாரியம் அவசியம்...
நாட்டில் வேறு சில மாநிலங்களில், நதிநீர் பங்கீடு தொடர்பான விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியை பின்பற்றி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications