ஜெஸிலா பானுவின் நம் நாயகம் நூல்: சென்னையில் ஜன.23ல் வெளியீடு
சென்னை: இதிகாசங்களை காப்பியங்களாக படிப்பதை விட சின்னச் சின்ன கதைகளாக படிப்பது எளிதில் மனதில் பதியும், சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். அதே பாணியில் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத சம்பவங்களை 'நம் நாயகம்' என்ற தலைப்பில் குட்டிக் கதைகளாக எழுதியுள்ளார் துபாய் எழுத்தாளர் ஜெஸிலா பானு.
ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா ஜனவரி 23ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ளது. நம் நாயகம் நூலினை வெளியிட்டு வாழ்த்துகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

இறைத் தூதராய் இந்த உலகில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
நபிகளாரின் போதனைகளை குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக வடித்துத் தந்திருக்கிறார் பானு. இதனால்தான் இந்த நூலைச் சிறாருக்கான சீறா என்று கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்த்துரையில் வர்ணித்துள்ளார்.
வரும் 23ம் தேதி சென்னை மைலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு தலைமை ஏற்கிறார் துபாய் ஈடிஏ நிறுவனங்கள் குழும துணைத் தலைவர் செய்யது எம்.சலாஹூதீன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், வேலூர் லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி எம். அப்துல் ரகுமான், சாத்தான் குளம் அப்துல் ஜப்பார், திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். புதியதலைமுறை இதழின் ஆலோசகர் மாலன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஏற்புரை வழங்குகிறார் ஜெஸிலா பானு. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆசிக் மீரான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications