தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரித்த ஜல்லி, மண் விலை.. வீடு கட்டுவோர் புலம்பல்.. கான்ட்ராக்டர்கள் மனு
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலைகளை யூனிட் ஒன்றிற்கு ரூ.1000 ம் திடீரென மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஸர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உயர்த்தியதால் பில்டர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர், அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விலையேற்றத்தால் அரசு கட்டிட கட்டுமாப பணிகள் பாதிக்கப்படும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர்b உமாவிடம் மாவட்ட பில்டர்ஸ் அசோசியேசன் சங்கம், அரசு ஒப்பந்ததார்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பில்டர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் பி.எஸ்.டி தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்டின் விலைகள் குறித்து கல்குவாரி மற்றும் கிரஸ்ர் உரிமையாளர்கள் சங்கத்தினர் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் 40 % விலையை திடீரென உயர்த்திள்ளனர். அதன்படி ஒரு யுனிட்க்கு 1000 உயர்த்தி 4 ஆயிரமாக அறிவித்துள்ளனர்.
திடீரென ஜல்லி, எம்.சாண்ட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஜல்லி, எம்.சாண்ட்களின் விலையை மார்ச் மாதம் வரை உயர்த்த கூடாது.
நாமக்கல், சேலம் திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஆட்சியரிம் மனு அளித்துள்ளோம், அவர் தனது தலைமையில் அனைத்து சங்கத்தினரையும் அழைத்து கூட்டம் நடத்தி விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். விலையேற்றத்தௌ குறைக்காவிட்டால் வேலை நிறுத்ததை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications