தினகரன் தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு.. தாண்ட முடியாத அகழி.. தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர் என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியுள்ளார். கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்றும் அவர் கூறினார்.
டிடிவி தினகரன் திஹார் சிறையில் இருந்து வந்ததும் வந்தார் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. எடப்பாடி தலைமையிலான அணி டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நாள்தோறும் எம்எல்ஏக்களை வரவழைத்து சந்தித்து தனது ஆதரவையும் பலத்தையும் காட்டி மிரட்டி வருகிறார் டிடிவி தினகரன்.
அவரை சந்திக்கும் எம்எல்ஏக்கள் மறக்கமால் செய்தியாளர்களை சந்தித்து தினகரனின் புகழை பாடிவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளரும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் சென்னை பெசன்ட்நகர் வீட்டில் டிடிவி தினகரனை சந்தித்தார்.

தினகரன் கட்டுப்பாட்டில்..
இதைத்தொடர்நுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றார். டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் தான் கட்சி இருக்கிறது என்றார்.

தகுதியுடையவர் தினகரன்
சந்திக்காத எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவும் டிடிவி தினகரனுக்குத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் கட்சியையும் ஆட்சியையும் காக்க தகுதி வாய்ந்தவர் டிடிவி தினகரன் மட்டும் தான் என்றும் அவர் கூறினார்.

அணைக்க முடியாத நெருப்பு
கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த தினகரனுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு.. தாண்ட முடியாத அகழி.. தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர்.. தமிழர்களின் மானம் காக்கும் மதில் என புகழ்ந்து தள்ளினார்.

நன்றி மறந்தவர் ஜெயக்குமார்
மேலும் ஆட்சி கவிழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமில்லாமல் பேசுவதாகவும் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications