காலில் விழுந்து கேட்கிறேன்… அதிமுகவிற்கு ஓட்டுப் போடுங்க…: நாஞ்சில் சம்பத் கெஞ்சல்!

தஞ்சை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனை ஆதரித்து, நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எதிர் அணியில் வாக்கு கேட்பவர்கள் யார் பிரதமர் என்று கூற முடியுமா? ஜெயலலிதா பிரதமரானால் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கறுப்பு பணத்தை மீடடுக் கொண்டு வருவார்.
17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டதுண்டா? விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? மத்திய அரசின் தவறான கொள்கைகள் தானே? ஆனாலும் தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது.
அம்மா உணவகங்கள் மூலம் அன்னதான புரட்சி செய்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும். 7 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தமிழக முதல்வரின் சாதனையை தமிழ் உணர்வாளர்கள் பாராட்டுகின்றனர். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் வற்புறுத்தி வருகிறார்.
அதேபோல, திருத்துறை பூண்டியில் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. நாகை தொகுதி வேட்பாளர் டாக்டர் கோபாலுக்கு வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை அம்மா எனக்கூறி நடைபெறும் லோக்சபா தேர்தல் ஒரு குருசேத்திர யுத்தம். இதில் ஜெயலலிதாவுக்கு வாக்கு அளித்து 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.
இதுவரை இலங்கை ராணுவம் 600 தமிழக மீனவர்களை பிடித்து சென்றுள்ளது. மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கருணாநிதி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இப்போது ஜெயிக்க முடியாது என்றார் நாஞ்சில் சம்பத்.
அவர் போகும் இடங்களில் இல்லாம் வாக்கு சேகரிக்கும் போது, அவர் கெஞ்சி கெஞ்சி வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications