அண்ணனை பலியிட்டு விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் ஸ்டாலின்.. நாஞ்சில் சம்பத் தாக்கு
உளுந்தூர்ப்பேட்டை: தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சொந்த அண்ணனையே பலியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் என்று அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதுதான் இப்படிக் குற்றம் சாட்டினார் சம்பத்.
உளுந்தூர்ப்பேட்டை பஸ் நிலையம் அருகே நடந்த பிரசாரத்தின்போது சம்பத் பேசியதிலிருந்து...

காலத்தின் கட்டாயம்.. அம்மா
முதல்வர் ஜெயலலிதா நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆனால் பிரசார கூட்டங்களில் அவர் மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.

சொந்த அண்ணனையே பலியிட்டவர் ஸ்டாலின்
சொந்த அண்ணனை பலிவாங்கி விட்டு அந்த இடத்தை ஸ்டாலின் தக்கவைத்துள்ளார்.

பாக். அட்டூழியம் குறைய அம்மா வர வேண்டும்
இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகளை காங்கிரஸ் அரசு பாழாக்கியுள்ளது. அதனால் தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லையில் வந்து இந்திய ராணுவ வீரரை கொலை செய்கிறார்கள். இந்த நிலை மாற ஜெயலலிதா நாட்டின் பிரதமராக வரவேண்டும்.

கல்வித்துறைக்காக ரூ. 18,000 கோடியை ஒதுக்கியவர் ஜெ.
இந்தியாவிலேயே 18 ஆயிரம் கோடி ரூபாயை கல்வித்துறைக்காக ஒதுக்கி சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவனும் லேப்-டாப்பை கையில் வைத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர் பிரதமராக வந்தால், தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.

அகண்ட பாரதத்தில் செயல்பட
எனவே அவர் அகண்ட பாரதத்தில் செயல்பட அவருக்கு வடிவம் தாருங்கள் என்றார் சம்பத்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications