For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பன்னீர்செல்வம் போராட்ட அறிவிப்பால் 'இவருக்கு' தூக்கமே போச்சாம்.. நாஞ்சில் சம்பத் கிண்டலை பாருங்க

ஊழலை எதிர்த்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தை அறிவித்தது முதல் சேகர் ரெட்டி தூக்கமின்றி தவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் அறிவித்தது முதல் தொழிலதிபர் சேகர் ரெட்டி தூக்கமின்றி தவிப்பதாக நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரனை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஓ. பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 10ம் தேதி அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சம்பத் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் அறிவித்தது முதல் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தூக்கம் போய்விட்டதாக குத்தலாக பதிலளித்தார்.

Nanjil sampath Jibes O.Pannerselvam protest

வேலூரைச் சேர்ந்த மணல் மாஃபியா சேகர்ரெட்டி அரசு அதிகாரிகள், அமைச்சர்களைக் கையில் வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக மணல் வெட்டி விற்பனை செய்து வந்தவர். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் வைத்திருந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்.

சேகர்ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தலைவர் பதவி வாங்கிக் கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும், ஓ.பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியும் நண்பர்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஓ.பிஎஸ் போராட்டம் குறித்து நாஞ்சில் சம்பத் இது போன்ற கருத்தை கூறியுள்ளார்.

English summary
Nanjil sampath says that after O.Pannerselvam announced protest his friend Sekar reddy lost his sleep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X