நாஞ்சில் சம்பத்தின் தந்தை காலமானார்.. ஜெ. இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினருமான நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர பணிக்கர் மரணமடைந்தார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், கழக செய்தித் தொடர்புக்கு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், அவரது குடும்பத்தி னருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications