For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலமகளே! என் அண்ணனை காப்பாற்று.. சசிகலா கணவர் நடராஜனுக்காக நாஞ்சில் சம்பத் உருக்கம்

சசிகலா கணவர் நடராஜனுக்காக உருக்கமாக ட்வீட் பதிவை போட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தினகரனை விட்டு வெளியே வந்துவிட்டாலும் நாஞ்சில் சம்பத் சசிகலா குடும்பத்துக்காக உருகிப் பேசுகிறார். சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடமாக இருப்பது குறித்து ட்விட்டரில் உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை ஏற்க மறுத்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் திடீரென சசிகலாவை சந்தித்து ஆதரவாளராக மாறினார்.

Nanjil Sampath tweets on Sasikala Husband Natarajan Health

சசிகலா சிறைக்கு போன நிலையில் தினகரனின் அதிதீவிர ஆதரவாளராக இருந்தார். அண்மையில் தினகரன் அமைப்பு தொடங்கிய போது அண்ணா, திராவிடம் பெயர் இல்லை என கூறி வெளியேறுவதாக அறிவித்தார்.

ஆனாலும் அவர் அளித்து வரும் பேட்டிகளில், சசிகலாவை உயர்வாகத்தான் பேசி வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் ட்விட்டரில், சசிகலா கணவர் நடராஜனுக்கான உருக்கமான ஒரு பதிவைப் போட்டுள்ளார்.

அதில், தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம்.கவலை என்னை கொத்தித் தின்னுகிறது . காலமகளே!உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று என பதிவிட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

English summary
Nanjil Sampath tweeted about Sasikala's hubsand Natarajan's health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X