கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம், உறவினர் மகன் உள்பட 3 பேர் பலி
சென்னை: நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் பலியாகினர்.

நடிகர் நாசரின் மகன் பைசல் நண்பர்கள் 4 பேருடன் புதுவைக்கு காரில் சென்றிருந்தார். அவர் இன்று புதுவையில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களின் கார் இன்று காலை 8 மணி அளவில் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த கார் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார்.
பலியானவர்கள் சென்னையைச் சேர்ந்த சித்து(22), சங்கர்(23) என்று தெரிய வந்துள்ளது. மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை. படுகாயம் அடைந்த மற்றொருவரின் பெயர் சண்முகசுந்தரம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பலியானவர்களில் ஒருவர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்று கூறப்படுகிறது.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி விபத்து நடந்த உடன் தப்பியோடிவிட்டார். பின்னர் அவர் மகாபலிபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications