பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள்.. மாணவர்களுக்கு சப் கலெக்டர் அட்வைஸ்
தேவக்கோட்டை அருகே அரசு உதவிப்பெறும் நடுநிலைப் பள்ளியில் வாக்களர் தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும
சிவகங்கை: தேவகோட்டை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதவி ஆட்சியர் மாணவர்கள் பெற்றோரிடம் கூறி அனைவரையும் வாக்களிச் செய்ய வேண்டும் என்றார். கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்கபடுத்தி உறவினரை வாக்களிக்க செய்த ஆறாம் வகுப்பு மாணவியை உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட உதவி ஆட்சியர் கலந்து கொண்டார்.
தேசிய வாக்களர் தின விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை வட்டாச்சியர் மங்களேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும்
பின்னர் உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் மாணவர்களிடம் பேசினார். அப்போது "மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்
வாக்களிப்பதன் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என உதவிஆட்சியர் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு அவர் அந்தப்பள்ளியில் வாக்களிப்பதன் நோக்கத்தை எடுத்து கூறியதை நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியின் வெற்றி - பெருமிதம்
இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் காயத்ரி என்ற மாணவி அவர்களது பக்கத்து வீடுகளில் எடுத்து சொல்லி இரண்டு வருடம் வாக்களிக்காத தனது உறவினரை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்ததாக ஆட்சியர் கூறினார். இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
மாணவிக்கு பாராட்டு
வாக்களிக்க ஊக்கப்படுத்திய மாணவியை சப் கலெக்டர் வெகுவாக பாராட்டினார்.இதே போன்று அனைவரும் தங்களின் வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி வாக்கு சதவிகித்தை அதிகபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
18வயது வந்தவுடன் வாக்களிக்க வேண்டும்
பள்ளியில் உள்ள அனைத்து மாணவ,மாணவிகளும் 18 வயது வந்த உடன் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பாராட்டுக்குரிய மாணவி காயத்ரியை இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைக்க சொல்கிறேன் என்றும் சப் கலெக்டர் பேசினார்.
பதாகைகளுடன் ஊர்வலம்
ஊர்வலம் தேவகோட்டையில் இரவுசேரி பாதை, வைத்தியலிங்கம் தெரு,நடராஜபுரம் முதல் தெரு,செப்பவயாளர் தெரு,நேரு தெரு,சின்னம்மாரியம்மன் கோவில் தெரு,ஜெயம்கொண்டார் தெரு,மு.மா.அள.தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக பேரணி மீண்டும் பள்ளிக்கூடத்தை அடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். வாக்களிக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
விழாவில் துணை தாசில்தார் சேது நம்பு, தேர்தல் பிரிவு எழுத்தர் ராஜேந்திரன்,கிராம நிருவாக அலுவலர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக நகராட்சி தேர்தல் பிரிவு எழுத்தர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications