தமிழகத்தில் அமையும் அரசு நாட்டை மீட்கும்.. தேசியவாத காங்கிரஸ் எம்பி மஜித் மேனன்
சென்னை: தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும் என்று கருணாநிதி வைரவிழா நிகழ்ச்சியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி பொருளாளரும், அக்கட்சியின் எம்பியுமான மஜித் மேனன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சார்பாக பங்கேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி பொருளாளரும், அக்கட்சியின் எம்பியுமான மஜித் மேனன், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் இந்தியாவே இணைந்துள்ளது.
இந்த மாபெரும் வைரவிழாவில் இந்தியாவே இணைந்துள்ளது. தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெறும். தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும் என்று பேசினார். மேலும் கருணாநிதியின் அரசியல் மாண்புகளை பாராட்டியும் பேசினார்.