தண்ணீர் பிடிப்பதில் போட்டா போட்டி... காதை கடித்து துப்பிய நபர்.. திருச்சியில் பயங்கரம்
திருச்சி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காது கடித்து துப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காது கடித்து துண்டாக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் மிளகு பாறை பகுதியில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ரங்கராஜ், மகேந்திரன் ஆகிய இருவருக்கும் மோதல் மூண்டது.

இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். பின்னர் கட்டி புரண்டு நடுத்தெருவில் சண்டையிட்டனர். அவர்களை கிராம மக்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
அப்போது திடீர் என ரங்கராஜ் மகேந்திரனின் காதை கடித்து துப்பினார். இதில் வலி தாங்காமல் அலறிய மகேந்திரனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
துண்டான மகேந்திரனின் காதை பொதுமக்கள் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ரங்கராஜை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications