நெடுவாசல் மக்களுக்கு மாநில அரசு மீது நம்பிக்கையில்லை - ஸ்டாலின்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மாநில அரசு மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே நெடுவாசல் மீது மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். களத்திற்கே நேரடியாக சென்று பேசி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
முதல்வருடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். ஆனாலும் போராட்டம் நீடித்து வருகிறது.

ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசல் செல்வதற்காக திருச்சி சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு உறுதிமொழி அளித்தும் அதை ஏற்க மக்கள் மறுத்து விட்டனர்.

அரசு மீது நம்பிக்கையில்லை
நெடுவாசல் மக்களுக்கு இந்த மாநில அரசு கொடுத்த உறுதி மொழியின் மீது நம்பிக்கையில்லை. எனவேதான் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கேள்விப்பட்டேன். இந்த அரசு வாய்மொழியாக கொடுக்கும் உத்தரவு ஏற்க முடியாது என்று மக்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு
மத்திய அரசு எழுத்துபூர்வ உறுதி மொழி அளித்தால் மட்டுமே நெடுவாசலில் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க மாநில அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போலீஸ் குவிப்பு
நெடுவாசலில் இன்று அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வந்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications