ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 174 நாட்கள் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சில நாள்கள் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயம் பாதிப்பு
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கினால் நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசுபடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சியாளர்கள் உறுதி
இதைத் தொடர்ந்து பொதுமக்களின் விருப்பம் இன்றி அந்த இடத்தில் அப்பணிகள் நடைபெறாது என்று தமிழக அரசு உயரதிகாரிகளும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

நம்ப வைத்து ஏமாற்றம்
இதைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 17 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது. இதற்கு நெடுவாசல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடம் வாக்குறுதி அளித்த நிலையில் மத்திய அரசு நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மீண்டும் போராட்டம்
இதை கண்டித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த போராட்டம் 100 நாள்களுக்கு மேலாகியும் இவர்களுக்கு தீர்வு ஏதும் காணப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

தற்காலிகமாக வாபஸ்
இந்நிலையில் 174 நாள்கள் நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டம் தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications