For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வருடன் பேசினோம், உறுதியளித்துள்ளார், அதை ஏற்கிறோம் - நெடுவாசல் போராட்டக் குழு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என முதல்வர் உறுதியளித்ததாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

Neduvasal team urges CM to cancel the program

அரசுத்துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளிக்கவில்லை என முதல்வர் கூறியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுடுத்தாது என முதர்வர் உறுதியளித்ததாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் கூறினார் என்றும் நெடுவாசல் போராட்டகுழு தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளது.

English summary
Neduvasal team met with CM Edappadi palanisamy. they were urged to CM To cancel the program of hydrocarbon expolaration
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X