நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்பது வேடிக்கை : அன்புமணி

நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்பது வேடிக்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்று மத்திய அரசு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்துள்ளது.

NEET allows only elite people to study Medical says Anbumani

இதுகுறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சூறையாடப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க நீட் தேர்வு அனுமதி வழங்குகிறது.

நீட் தேர்வு தகுதியை உறுதி செய்யும் தேர்வாக இல்லை. ஆனால், மத்திய அரசு இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இதன் மூலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவப் படிப்பு இடங்களை அதிக பணத்திற்கு விற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+