சிபிஎஸ்இயின் அடாவடிதனத்தால் நடந்த கொடூரம்.. அப்பா இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிய மகன்!
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்ற நபர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதினார். தேர்வு முடியும் வரை இந்த செய்தி அந்த மாணவனிடம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. இந்தமுறை தந்தை ஒருவரின் உயிரை பலி கேட்டு இருக்கிறது மத்திய அரசின் இந்த நீட். நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்ற இவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த தகவல் உள்ளே தேர்வெழுதிக் கொண்டு இருந்த அவரின் மகன், கஸ்தூரி மகாலிங்கத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கஸ்தூரி மகாலிங்கம் தன் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதினார். தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அவருக்கு அப்போது தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அனிதாவின் உயிரை வாங்கிய போதே நீட் வேண்டாம் வேண்டாம் என்ற தமிழகம் கொந்தளித்தது, இப்போது இன்னொரு உயிரை இது குடித்துள்ளது. சிபிஎஸ்இ செய்த அடாவடி தனத்தால் இத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications