நீட்: மாணவி பிரதீபா உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விழுப்புரம்: நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று நீட் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகம் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பிரதீபா உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக செஞ்சி பெரவளுரில் உள்ள பிரதீபாவின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதீபாவின் இல்லத்திற்கு சென்று அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பிரதீபாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
#NEET தேர்வினால் தன் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். #BanNEET pic.twitter.com/5KPzBfKmMj
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
அதன்பின் ஸ்டாலின் பிரதீபாவின் பெற்றோரிடம் ஆறுதலாக பேசினார். ஏற்கனவே பிரதீபா மரணத்திற்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.