நீட்.. நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்.. தமிழிசையே சொல்லி விட்டார்!
இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி கேட்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி கேட்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார். மேலும் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்ட கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்ற வருடம் இந்தியா முழுக்க நீட் தேர்வு மூலம் மருத்துவ இருக்கைகள் நிரப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு வந்தது.

மாநில கல்வியில் படித்த மாணவர்கள் சரியாக இதில் எழுத முடியாது என்று கூறப்பட்டது. நிறைய போராட்டங்கள் நடந்தது. ஆனாலும் தேர்வு முறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி இருக்கும். தமிழக மாணவர்கள் இந்த தேர்வை இந்த முறை பயம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்'' என்று கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து விவாதித்த போது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மாநில பாடத்திட்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications