தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவர் பலி... நீச்சல் தெரியாததால் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நீச்சல் தெரியாத மாணவர் ஒருவர் தாமிரபரணி ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை அடுத்துள்ளது பேட்டை. அங்குள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் குமார். இவர் தனது நண்பர் சதீஷ் மற்றும் விக்னேஷூடன் அறிவியல் மையத்தை சுற்றி பார்த்து விட்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ் குளிக்க சென்றனர்.

ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்ற சதீஷ்குமார், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். நண்பன் நீரில் மூழ்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற இரு மாணவர்களும் கரைக்கு வந்து அக்கம் பக்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் வீரர்கள் வந்து சதிஷ்குமாரை தேடும் பணியில் ஈடு பட்டனர். இறுதியில் சதீஷ்குமாரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சதிஷ்குமாரின் பெற்றோர் மகன் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

தாமிரபரணி ஆற்றில் ஒரு சில பகுதிகள் மிகவும் ஆபத்தானவை. ஆழம் தெரியாமல் குளிப்பவர்கள் ஆற்றில் மூழ்கி இறப்பதால் ஆழமான அந்தந்த பகுதிகளில் காவல் துறை சார்பில எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பா சுலோச்சனா முதலியார் ஆற்று பாலத்தின் கீழ் 97ம ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலையை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் மூழ்கி இறந்தனர். அந்த இடத்திலு்ம் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+