நெல்லையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக இந்து முன்னனியினர் 19 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை டவுனில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டது. இது தொடர்பாக இந்து முன்னணியினர் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நெல்லை டவுன் பட்டாபத்து குமரன் தெருவில் ஓவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் அதனை ஆற்றில் கரைப்பது வழக்கம்.

Nellai: 19 persons arrested

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது இங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக போலீசார் அனுமதித்த பாதை வழியாக செல்லாமல் பிரச்சனைக்குரிய பகுதி வழியாக கொண்டு செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததால் தளளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக இந்து முன்னனியை சேர்நத சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் எதிரோலியாக போலீசார் இந்தாணடு அங்கு விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுததனர். ஆனால் அனுமதியின்றி பட்டாபத்து குமரன் தெருவில் இந்து முன்னனியினர் விநாயகர் சிலையை வைத்தனர். இதையடுத்து உதவி கமிஷனர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர் முருகன் மறறும் போலீசார் அங்கு வந்து சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர்.

இது தொடர்பாக இந்து முன்னனி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் வினோத், வக்கீல் வீரராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் முனனிலையில் கைப்பற்றப்பட்ட விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனபோதும், தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+