ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்ட அதிகாரிகள் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிடியாக மீட்டுள்ளனர்.
நெல்லை மாநகரட்சி எல்லையை ஓட்டியுள்ளது சுத்தமல்லி கிராமம். இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பணிபுரிந்த தலையாரி ஓருவர் இலவச பட்டா பெற தகுதி இல்லாத 4 பேருக்கு 50 சென்ட் வீதம் பட்டா போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து சுத்தமல்லியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்குட்டி பாண்டியன் மேல்முறையீடு செய்தார். அதன் அடிப்படையில் ஆர்டி ஓ விசாரணை நடத்தி தகுதியற்றவர்களின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அந்த இடம் அரசு சொத்தாக மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஏற்கனவை இலவச பட்டா பெற்றவர்கள் அரசு அதிகாரிகள் துணையோடு அனுபவ பாத்திய ரசீதும் பெற்று கொண்டு போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த இட்த்தை வேறு சில நபர்களுக்கு பத்திர பதிவு செய்து விற்று விட்டனர்.
இடத்தை வாங்கிய நபர்கள் சிலர் அதில் வேலி அமைத்தும், கடைகள் கட்டியும வாடகைக்கு விட்டுள்ளனர். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை இயக்க தலைவர் மாணிக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்க உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் 4 மாத அவகாசம் கொடுத்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications