ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்ட அதிகாரிகள் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிடியாக மீட்டுள்ளனர்.
நெல்லை மாநகரட்சி எல்லையை ஓட்டியுள்ளது சுத்தமல்லி கிராமம். இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பணிபுரிந்த தலையாரி ஓருவர் இலவச பட்டா பெற தகுதி இல்லாத 4 பேருக்கு 50 சென்ட் வீதம் பட்டா போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து சுத்தமல்லியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்குட்டி பாண்டியன் மேல்முறையீடு செய்தார். அதன் அடிப்படையில் ஆர்டி ஓ விசாரணை நடத்தி தகுதியற்றவர்களின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அந்த இடம் அரசு சொத்தாக மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஏற்கனவை இலவச பட்டா பெற்றவர்கள் அரசு அதிகாரிகள் துணையோடு அனுபவ பாத்திய ரசீதும் பெற்று கொண்டு போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த இட்த்தை வேறு சில நபர்களுக்கு பத்திர பதிவு செய்து விற்று விட்டனர்.
இடத்தை வாங்கிய நபர்கள் சிலர் அதில் வேலி அமைத்தும், கடைகள் கட்டியும வாடகைக்கு விட்டுள்ளனர். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை இயக்க தலைவர் மாணிக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்க உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் 4 மாத அவகாசம் கொடுத்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications