நெல்லை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லை... நோயாளிகள் கவலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நெல்லை அருகே பாவூசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. கீழப்பாவூர் ஊராட்சி ஓன்றியத்துக்கு உள்பட்ட இந்த சுகாதார நிலையத்துக்கு 21 ஊராட்சிகள் அடங்கி உள்ளன. இங்கு வசித்து வரும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ வசதி பெற பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரவசம் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

Nellai : lack of doctors in health care centre

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு 5 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் இரண்டு டாக்டர்கள் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தற்போது 3 டாக்டர்களே உள்ளனர். அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் நோயாளிகள் உரியி சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

குறிப்பாக வெளி நோயாளிகள் காலையில் சென்று மதியம் வரை டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்குவதற்கும், ஊசி போடுவதற்கும் வெகு நேரம் காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இந்த மருத்துவமனைக்கு போதிய பஸ் வசதி இருப்பதால் நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால் அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

இதனை தவிர்க்க டாக்டர்கள் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+