ஆறு, குளத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் - கடையநல்லூரில் தொற்று நோய் அபாயம்
நெல்லை: கடையநல்லூர் பகுதியில் உள்ள ஆறு, குளங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அங்கு மறுபடியும் டெங்கு உள்பட பல நோய்கள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அதிக அளவிலான விவசாயம் நடைபெறுவதால் அங்கு ஏராளமான குளங்கள், கால்வாய்கள் உள்ளன. கடையநல்லூர் நகரப்பகுதி வழியாக பாப்பான்குளம் கால்வாய், சீவலங்கால்வாய் உள்பட பல கால்வாய்கள் செல்கின்றன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதோடு நகர பகுதியில் உள்ள அட்டைகுளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்களும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் இந்த கால்வாய்கள் மட்டுமின்றி அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகிறது. அத்துடன் கடையநல்லூர் பகுதிகளில் தினந்தோறும் உணவுக்களுக்காக வெட்டப்படும் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளும் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இதனால், அப்பகுதியிலிருந்து கடுமையாக தூர்நாற்றம் வீசுவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டு கொள்வதே இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே இங்கு 2010ம் ஆண்டு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் கடுமையான தொற்று நோய் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் மோலானோர் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோய் தொற்று நெல்லை மாவட்டம் முழுவதும் பரவியதால் சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர ஆய்வு செய்தனர். இதனால் ஓரளவுக்கு நோய் கட்டுபாட்டுக்குள் வந்தது.
இந்தநிலையில் மீண்டும் சுகாதாரம் கெட்டு வருவதால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications