நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நெல்லை ரயில் நிலையம் மிகவும் முக்கியமானது. பயணிகளின் வருவாய், சரக்கு, பார்சல் வருவாய் மூலம் கணிசமான அளவு தெற்கு ரயில்வேக்கு கிடைத்து வருகிறது.
மதுரை கோட்டத்திற்கு பார்சல் வருமானத்தை பொறுத்தவரை மதுரையும், விருதுநகரும் இது நாள் வரை தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக இருந்து வந்தது. தற்போது அது நெல்லையையும் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் இந்த ரயில் நிலையத்தில் பார்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அழுகும் பொருட்கள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்தால் இதற்கு முன்பு 18 மணி நேரம் வரை அங்கு வைத்திருக்க பணம் செலுத்த வேண்டியதில்லை.
அதன் பி்ன்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50 கிலோ பார்சல் என்றால் 50 பைசா வீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த கால அவகாசம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட ரயில் நிலையமாக நெல்லை அறிவிக்கப்பட்டுள்ளதால் 10 மணி நேரத்திற்குள் பார்சல்களை பொதுமக்கள் எடுத்தாக வேண்டும். அதற்கு மேல் 10 மணி நேரத்திற்கு மேல் 1 மணி நேரத்திற்கு 1 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இது போல் கார், பைக் போன்றவற்றை 6 மணி நேரத்திற்குள் பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்கு மேல் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 10 வீதம் சம்பந்தப்பட்டவரிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications