நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நெல்லை ரயில் நிலையம் மிகவும் முக்கியமானது. பயணிகளின் வருவாய், சரக்கு, பார்சல் வருவாய் மூலம் கணிசமான அளவு தெற்கு ரயில்வேக்கு கிடைத்து வருகிறது.
மதுரை கோட்டத்திற்கு பார்சல் வருமானத்தை பொறுத்தவரை மதுரையும், விருதுநகரும் இது நாள் வரை தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக இருந்து வந்தது. தற்போது அது நெல்லையையும் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் இந்த ரயில் நிலையத்தில் பார்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அழுகும் பொருட்கள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்தால் இதற்கு முன்பு 18 மணி நேரம் வரை அங்கு வைத்திருக்க பணம் செலுத்த வேண்டியதில்லை.
அதன் பி்ன்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50 கிலோ பார்சல் என்றால் 50 பைசா வீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த கால அவகாசம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட ரயில் நிலையமாக நெல்லை அறிவிக்கப்பட்டுள்ளதால் 10 மணி நேரத்திற்குள் பார்சல்களை பொதுமக்கள் எடுத்தாக வேண்டும். அதற்கு மேல் 10 மணி நேரத்திற்கு மேல் 1 மணி நேரத்திற்கு 1 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இது போல் கார், பைக் போன்றவற்றை 6 மணி நேரத்திற்குள் பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்கு மேல் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 10 வீதம் சம்பந்தப்பட்டவரிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications