நெல்லையில் மீண்டும் தலை தூக்கும் டெங்கு... சிறுவன் பலி... முகாமிட்ட சுகாதாரத்துறையினர்
நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் ஒருவன் பலியானதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அனைத்து வீடுகளிலும் கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமததை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ரியோ ஜெசி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சோர்வடைந்த நிலையில் கடந்த 11ம்தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டான். அங்கு குழந்தைகள் வார்டு சிறப்பு சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் ஜேசி பரிதாபமாக இறந்தான்.

அவனுககு ஏற்பட்ட காய்ச்சல் ஏது என்பது குறித்து உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சிறுவனின் ரத்த மாதிரி சோதனையில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நெல்லை சுகாதார துறை இனை இயக்குனர் ராம்கணேஷ் தலைமையில் தாளார்குளம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் மேலும் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் 4 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுதது அனைத்து வீடுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. வாட்டர் டேங்க், குடிநீர் தொட்டிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சிரட்டைகள், பழைய டயர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நெல்லை மவட்டத்தில் பல பகுதிகளில் கொசு ஓழிப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் டெங்கு தலை தூக்கியுள்ளதால் அப்பகுதி மக்களும், சுகாதார துறையினரும் அதிர்சசி அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications