நேதாஜி உயிருடன் இருக்கிறார், என்னிடம் ஆதாரம் உள்ளது: வைகோ
மதுரை: நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நேதாஜி பிரகடன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓபுளாபடித்துறையில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,
ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளில் ஆயுதபூஜை நடக்கிறது. நேதாஜி உயிருடன் இருப்பதாக கடந்த 1946ம் ஆண்டில் காந்தியடிகள் தெரிவித்தார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ஏன் மறைக்கிறது?
நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிப்பேன்.
2016ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் சரி, திமுகவும் சரி பெற்றி பெற முடியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புத்தகம் ஒன்றில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சட்டசபை தேர்தலில் மதிமுகவுக்கு 77 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும். தமிழக மக்களுக்காக தட்டிக் கேட்க தயங்கவே மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications