டிவிட்டரில் அனல் பறக்கும் கீழடி.. வீறுகொண்டெழுந்த தமிழர்கள்.. டிரெண்டிங்கில் ஹாட் ஸ்பாட்!
சென்னை: கீழடி அகழாய்வின் போது செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது 2600 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்சுவடுகள் கிடைத்தது. இதனால் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது கீழடி என தெரியவருகிறது.
மதுரை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் #KEEZHADIதமிழ்CIVILIZATIONWe என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
கீழடி.. வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்- தமிழ், ஆங்கிலத்தில் முழு அறிக்கை இங்கே!
|
கீழடி சொல்லும் உண்மை
ஆரம்பத்தில் தமிழகம் இறந்தவர்களை அடக்கம் செய்யும் நாடாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கீழடி இவற்றையெல்லாம் துண்டு துண்டாக கிழித்துவிட்டது. குமரி காண்டம் என்பதெல்லாம் புராணக் கதை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு நாள் லெமுரியா குறித்த உண்மைகளை கீழடி சொல்லும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
|
வரலாறு
உலகில் மற்ற நாகரிகத்தை விட நாம் பழமையானவர்கள். வரலாற்றை மாற்றி அமைப்போம்.
|
திமிரேறும்
தமிழன் டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காத்தோட கலந்தாலும்
அது தான் என் அடையாளம்.
|
மத அடையாளம் இல்லை
கீழடியில் இந்துக்களின் வரலாறோ, முஸ்லிம்களின் வரலாறோ, கிறிஸ்துவர்களின் வரலாறோ இல்லை.
|
தமிழனாக
தமிழ்தான் நமது பெருமை. தமிழ் எல்லா மொழிகளுக்கும் தாய். அதுதான் நம் அடையாளம். தமிழனாக பிறந்து தமிழனாக வளர்ந்ததில் பெருமைப்படுவோம்.
|
5000-க்கும் மேற்பட்ட பொருட்கள்
2600 ஆண்டுகளுக்கு முன் ஒரு நகரம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட பொருள்களில் எந்தவித மத அடையாளங்களும் இல்லை.