போர் வந்தால்... கர்நாடக தேர்தல் முடிந்து தான் போரை தொடங்குவோம் என்பாரா பிரதமர்.. மக்கள் ஆவேசம்
போர் வந்தால் கூட கர்நாடக தேர்தல் முடிந்துதான் போரை தொடங்குவோம் என்பாரா பிரதமர் என்று மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: கர்நாடக தேர்தலை காரணம் காட்டி வரைவு திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு நேரம் கேட்டுள்ளதற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் இருப்பதால் மேலும் கால அவகாசம் வழங்குமாறு மத்திய அரசு நேரம் கேட்டுள்ளது.
இதற்கு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஒரு மாநிலத்தின் பிரசாரத்துக்காக மற்றொரு மாநிலத்தை மத்திய அரசு நசுக்கிறது என்று கருத்து நிலவி வருகிறது.
|
பரோட்டா கணக்கு
காவேரி நீரை திறந்து விட சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு விட்ட போது ...
பரோட்டா சூரி பரோட்டா சாப்பிட்ட கணக்குக்காக கோடு போடுவது போல் உத்தரவு உள்ளது என்கிறார் இந்த வலைஞர்.
|
தமிழ்நாடு அழியட்டும்
#தமிழ்நாடு அழியட்டும்: பாஜகவுக்கு கர்நாடக தேர்தல்தான் முக்கியம்! -உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு தகவல்!
பிரதமர் மோடி கர்நாடக பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை- என மத்திய அரசு தகவல்!
|
உரிமை நசுக்கப்படுகிறது
#போர் வந்தால் ... #கர்நாடக தேர்தல் முடிந்து தான் போரை தொடங்குவோம் என்பாரா #பிரதமர் ...
தமிழர்களின் #உரிமை நசுக்கப்படுகிறது இந்தியாவில் ..
|
காலையா மாலையா
ரெண்டாவது ஷட்ட்டர் வழியா தண்ணி விடனுமா மூணாவது ஷட்டர் வழியா தண்ணி விடனுமா?
கர்நாடகா உச்ச நீதி மன்றத்தில் சந்தேக மனு.
சு.கோ பதில்: உங்கள் இஷ்டம்.
கர்நாடக மீண்டும் மனு: காலையில் தொறந்து விடவா மதிய சோறு தின்னுட்டு விடவா?
|
பேப்பர் காத்துல போச்சு
அடுத்தமுறை தாக்கல் பண்ண வரும்போது பேப்பரெல்லாம் காத்துல பறந்துடிச்சுன்னு காரணம் சொல்லுவாங்கனு நெனைக்கிரேன்