பாலில் கலப்படம் இல்லையாம்... அப்ப தூக்கில் தொங்குவாரா அமைச்சர்???
பாலில் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னபடி செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: பாலில் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் சொன்னபடி செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் ராஜேந்திர பாலாஜி. தனியார் பால் நிறுவனங்களை வளைத்து வளைத்து குற்றம்சாட்டிய அவர் தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் குண்டை தூக்கிப்போட்டார்.
தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

தூக்கில் தொங்குவேன்
தனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். கமிஷனுக்காக பால் முகவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் பாலில் நடைபெறும் கலப்படம் குறித்து ஆய்வு செய்ய புனேவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். தனது குற்றச்சாட்டுகள் பொய்யானால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், தூக்கில் தொங்குவேன் என்றும் கூறினார்.

பாலில் கலப்படம் இல்லை
இதனால் தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் அதிர்ந்து போயினர். அமைச்சரின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தரப்பரிசோதனை முகாமில் 62 பால் மாதிரிகளை உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தது. அதில் எந்த ஒரு பால் மாதிரியிலும் தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை என தெரியவந்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

துளைக்கப்படும் அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் சொன்னததை செய்வாரா? என கேள்வி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைதளத்திலும் நெட்டிசன்கள் அமைச்சரை துளைத்து வருகின்றனர்.
|
நேரலையில் எப்போது போடப்போறீங்க?
அப்போ அமைச்சர் தூக்கில் தொங்குவதை நேரலையில் எப்போது போடப்போறீங்க? எனக்கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
ராஜினாமா செய்ய வேண்டும்
இதற்கு அமைச்சர் பதில் சொல்வாரா? தவறான தகவல் கொடுத்த அமைச்சர் பதவி விலக வேண்டும். என்கிறார் இந்த வலைஞர்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications