நாங்க உங்ககிட்ட கேட்டோமா.. நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட ரஜினி
சென்னை: இனிவரும் தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என ரஜினிகாந்த் அறிவித்தாலும் அறிவித்தார், நெட்டிசன்கள் செம 'காண்டாகிவிட்டனர்'.
1996ம் ஆண்டு ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருந்தார். அப்போது அவரது ரசிகர்கள் இளைஞர்கள். எனவே ஜெயலலிதாவுக்கு எதிராக அப்போது அவர் கூறிய வார்த்தை தேர்தலில் எடுபட்டது. இப்போது அவரது ரசிகர்கள் அனைவரும் நடுத்தர வயதை கடந்தவர்கள். எனவே இப்போது அவரது வாய்ஸ் எடுபடுவதில்லை.
2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய ரஜினி, தொடர்ந்து பேசுகையில் நான் பாரதீயஜனதாவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன். தமிழக மக்களும், ரசிகர்களும் என்னைப் போலவே சிந்தித்துப் பார்த்துஓட்டுப் போட வேண்டும் என்றார். இதன்மூலம் பா.ஜ.கவுக்கே ஆதரவு என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார் ரஜினி.

பாஜக தோல்வி
ஆனால், அந்த தேர்தலில் பாஜக படுதோல்வியைதான் சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனவே ரஜினியின் வாய்ஸ் எடுபடுவதில்லை என்ற பேச்சு எழுந்துவிட்டது. இந்த நிலையில்தான், ரஜினி இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்ததும், அவரது டிவிட்டர் கணக்கிற்கே சென்று நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்துள்ளனர்.
|
சப்போர்ட் யாருக்கு வேண்டும்
"என்னமோ இவரு சப்போர்ட்ட வச்சு தான் நாங்க ஓட்டு போடுற மாதிரியே" என்று அரண்மனை பட காட்சியை வைத்து ஓட்டுகிறது இந்த டிவிட்.
|
நீங்க கொடுத்துட்டாலும்
கவுண்டமணி நடித்த காட்சியை வைத்து, நீங்கள் கொடுத்துட்டாலும் நாங்க அப்படியே அசந்துதான் போய்விடுவோம் என கலாய்க்கிறது இந்த டிவிட்.
|
இங்கையுமா
மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா, என வழக்கமாக தனுஷுக்கு போடும் மீம் இப்போது அவரது மாமனார் ரஜினிக்கு போடபப்பட்டுள்ளது.
|
போதும்ப்பா
போதும்ப்பா நீங்க சப்போர்ட் பண்ணியது, என கூறும் வகையில், ஆண்டவன் கட்டளை படத்து காட்சியை மீம் போட்டுள்ளார்கள்.
|
பழைய நினைப்பு
யாரோ உங்க மனசுல ஆழமா நீங்க இன்னமும் சூப்பர் ஸ்டார் தான் நம்ப வச்சிட்டாங்க, என கூறுகிறது இந்த டிவிட்.












Click it and Unblock the Notifications