ஆட்சி கவிழ்ப்பின் பெயரில் அடேங்கப்பா வசூலாமே!
ஆட்சி கவிழ்ப்பின் பெயரில் அடேங்கப்பா வசூல் வேட்டை நடந்ததுதான் இப்போதைய பரபரப்பு செய்தி.
யாரோ ஒருத்தர் எப்படியும் ஆட்சிக்கான பியூஸை பிடுங்கிடுவாங்க... எப்படியும் நாற்காலி கவிழ்ந்துவிடும் என இலவு காத்த கிளிகள் காத்திருக்கின்றன.
இத்தகைய கிளிகளில் ஒன்று ஆட்சியைக் கவிழ்க்க நாமே களமிறங்குவோம் என ஒரு வியூகம் வகுத்தது. மொத்தம் 33 பேருக்கு குறிவைத்து ரேட்டும் பிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
இந்த 33 பேருக்குமான அமவுண்ட்டை செட்டில் செய்ய சில "பாளையக்காரர்கள்" பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் பசையான பவுசு பதவி கிடைக்கும் என்கிற நப்பாசையில் பதுக்கி வைத்ததை பாயவிட்டு கப்பம் கட்டியிருக்கிறார்கள்.
இப்படியான வசூல் எல்லாம் முடிவடைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் யாரும் பியூஸையும் பிடுங்கலை... நாற்காலியையும் கவிழ்க்கவில்லை.
நினைப்புக்கு எதிராக, பெவிகால் போட்டு ஒட்டியதைவிட படு ஸ்டிராங்காக ஆட்சி நடந்து வருகிறது. இதனால் கப்பம் செலுத்திய பாளையக்காரர்கள் மென்று விழுங்கியபடியே கொடுத்தது திருப்பி கிடைக்குமா என தேவுடு காத்திருக்கிறார்களாம்.
அவர்களுக்கும் தெரியும்... போன பணம் எப்படியும் திரும்பி வராது என... இருந்தாலும் நப்பாசையில் நச்சரித்துப் பார்க்கிறார்களாம்...!