ரங்கசாமி டீ குடித்தார்...!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செம வித்தியாசமானவர். அவர் என்ன செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது. காரணம், வழக்கமான அரசியல்வாதி போல இல்லாமல் படு கேஷுவலாக அவர் எதையும் செய்வதால்.
திடீர் திடீரென புல்லட்டில் ஏறி புதுச்சேரியை ரவுண்டடிப்பார் ரங்கசாமி. படு சாதாரணமாக டீக்கடைக்குப் போவார். டீ குடிப்பார். வடை பஜ்ஜி சாப்பிடுவார்.
சாதாரண மக்களோடு மக்களாக படு இயல்பாக இருப்பவர் அவர். அவரது போன் நம்பர் தெரியாத புதுச்சேரிக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவருக்குப் போன் செய்து படு சகஜமாக பேசுவது புதுவையில் மிகவும் சகஜமானது.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில், ரங்கசாமி தனது காரில் அமர்ந்தபடி ஒரு சாலையோர டீக்கடையோரம் காரை நிறுத்தி டீ சாப்பிடுவது போன்ற படம் பரவி வருகிறது. கார் டிரைவரும் காருக்கு வெளியே நின்றபடி அவரும் ஒரு டீயை ஆத்திக் குடிக்கிறார்.
ரங்கசாமி போல ஒரு முதல்வர்.. ம்ஹூம்.. ஒரு தலைவராவது தமிழகத்தி்ல் இருப்பார்களா...??