உருவானது அகில இந்திய முத்துராமலிங்க தேவர் முன்னேற்ற கழகம்!
சென்னை: அகில இந்திய முத்துராமலிங்கத் தேவர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இன்று புதிய கட்சி ஆரம்பமானது.
தேவர் குரு பூஜை நடக்கும் இந்த நாளில் இப் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சியின் தலைவராக மு.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலராக திரைப்பட இயக்குனர் பாலா முருகன் ஜி தேர்வு செய்யப்பட்டார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வளசரவாக்கம் சிவன் கோயிலில் இன்று ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்வாக 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. வளசரவக்கதிலுருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நந்தனம் தேவர் சிலையை நோக்கி புறப்பட்டது. அங்கு தேவர் சிலைக்கு பால் அபிசேகம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லையிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபல நையாண்டி மேளக் குழுவின் ஆட்டம் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில் காந்தேஸ்வரர் படத்தின் நாயகி சித்திரலேக நாராயணன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications