வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு வருவோரின் நலனுக்காக.. புது ரயில் நிலையம்!
சென்னை: சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு வருகை தருவோரின் வசதிக்காக பூங்காவுக்கு எதிரிலேயே புதிய ரயில் நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள் ரயில் நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அதிக விஸ்தீரமானதுமான உயிரியல் பூங்கா வண்டலூர் பூங்காதான். இங்கு சிங்கம், புலி, சிறுத்தை முதல் சாதாரண பறவை வரை பல வகையான விலங்குகள் அடைக்கப்பட்டுள்ளன.

தினசரி உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பூங்காவுக்கு வருகை தருகின்றனர். இந்தப் பூங்காவுக்கு ரயிலில் வருவோர் தாம்பரம் வந்து பின்னர் அங்கிருந்து வண்டலூர் ரயில் நிலையம் வர வேண்டும். அதன் பின்னர் சுமார் 2 கிலோமீ்ட்டர் தொலைவுக்கு நடந்து பூங்காவுக்குள் போக வேண்டும்.
பூங்கா பெரிது என்பதால் அங்கும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் ரயில் நிலையத்த அடைவதற்குள் கால், கை எல்லாம் விட்டுப் போய் விடும். எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள ஓட்டேரியில் புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதற்காக செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், தாசில்தார் பஷீரா ஆகியோர் ஓட்டேரி ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஒரு ஏக்கர் 20 சென்ட் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் பிளாட்பாரம், டிக்கெட் கவுன்ட்டர், நடை மேம்பாலம், கழிப்பறை உள்ளிட்ட பல அதி நவீன வசதிகள் இடம் பெறும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த இடத்தில் புதிய ரயில்வே நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications