For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலோர காவல் படையில் இணைந்த புதிய கப்பல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இந்திய கடலோர காவல்படையில் புதியதாக ரோந்துகப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படையில் 26 ஆண்டுகள் சேவை புரிந்த அகல்யாபாய் கப்பலுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது. புதிய கப்பல் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அகல்பாய். இந்த கப்பல் 26 காலமாக மன்னார் வளைகுடா பகுதியில் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தது.

பல்வேறு சமயங்களில் திசை மாறிய படகுகள், கடலில் தத்தளித்த மீனவர்கள், காணாமல் போனவர்களை தேடுதல் உள்பட சிக்கலான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தைகய சிறப்பு வாய்ந்த இந்த கப்பல் ஏறக்குறைய 26 ஆண்டு காலம் பணி செய்து அதன் ஆயுட் காலத்தை முடித்து விட்டது.

இதன் காரணமாக புதிய ரோந்து கப்பல் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அகல்யாபாய்க்கு புதிலாக புதிய ரோந்து கப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட உள் நாட்டு தயாரிப்பாகும். இந்த கப்பல் 50 மீட்டர் நீளமும், 4.65 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. மணிக்கு 33 நாட்டிகல் வேகத்தில் செல்ல கூடியது. தொடர்ந்து இடைவிடாமல் 1500 கடல் மைல் தூரம் வரை செல்ல கூடியது. இதன் உடல் அமைப்பு அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ பைலட், பைபா ஆப்டிக் கைரோ காம்பஸ், நேவிகேட் 3000 போன்ற வசதிகளும், முன்பகுதியில் சிறிய பிரங்கியும், பக்க வாட்டில் லைட் மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் வங்கள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ளும்.

இந்தாண்டில் மட்டும் தொடர்ந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான வீரா, அகல்யாபாய் என்ற இரண்டு கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

English summary
A New patrolling ship joins Indian Coast Guard
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X