கடலோர காவல் படையில் இணைந்த புதிய கப்பல்
தூத்துக்குடி: இந்திய கடலோர காவல்படையில் புதியதாக ரோந்துகப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் 26 ஆண்டுகள் சேவை புரிந்த அகல்யாபாய் கப்பலுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது. புதிய கப்பல் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அகல்பாய். இந்த கப்பல் 26 காலமாக மன்னார் வளைகுடா பகுதியில் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தது.
பல்வேறு சமயங்களில் திசை மாறிய படகுகள், கடலில் தத்தளித்த மீனவர்கள், காணாமல் போனவர்களை தேடுதல் உள்பட சிக்கலான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தைகய சிறப்பு வாய்ந்த இந்த கப்பல் ஏறக்குறைய 26 ஆண்டு காலம் பணி செய்து அதன் ஆயுட் காலத்தை முடித்து விட்டது.
இதன் காரணமாக புதிய ரோந்து கப்பல் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அகல்யாபாய்க்கு புதிலாக புதிய ரோந்து கப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.
இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட உள் நாட்டு தயாரிப்பாகும். இந்த கப்பல் 50 மீட்டர் நீளமும், 4.65 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. மணிக்கு 33 நாட்டிகல் வேகத்தில் செல்ல கூடியது. தொடர்ந்து இடைவிடாமல் 1500 கடல் மைல் தூரம் வரை செல்ல கூடியது. இதன் உடல் அமைப்பு அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ பைலட், பைபா ஆப்டிக் கைரோ காம்பஸ், நேவிகேட் 3000 போன்ற வசதிகளும், முன்பகுதியில் சிறிய பிரங்கியும், பக்க வாட்டில் லைட் மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் வங்கள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ளும்.
இந்தாண்டில் மட்டும் தொடர்ந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான வீரா, அகல்யாபாய் என்ற இரண்டு கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications