பாமகவின் புதிய துணைச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ கண்ணையன் நியமனம் - ஜி.கே.மணி அறிக்கை

பாமகவின் புதிய மாநிலத் துணைச் செயலாளராக கண்ணையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய துணை பொதுச்செயலாளராக முன்னாள் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணையன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய துணைச் செயலாளர் நியமனம் குறித்து அதன் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

New state deputy secretary was nominated in PMK

கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலோடு, சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., தமிழரசு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், மாநில, மாவட்ட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.

இதையடுத்து, சேலம் மாவட்டம், தாரமங்கலம், அருகிலுள்ள கோழிக்காட்டானூரை சேர்ந்த மாநில துணை தலைவராக இருக்கும், முன்னாள் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., கண்ணையன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டம் தலைவர், மாநில துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+