புத்தாண்டு கொண்டாட்டங்கள்: 15 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 34 ஆம்புலன்ஸ்கள் தயார்!
சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையில் 34 ஆம்புலன்ஸ்களும், 15 நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக ‘108' ஆம்புலன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்த சமயத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள், விபத்துகள் நடைபெற்றால் அவற்றில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

இதன்படி, 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. மேலும், 15 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அவசரக் கால மருத்துவ உதவியாளர், ஒரு தன்னார்வத் தொண்டரும் இருப்பர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, அண்ணாசாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதியில் இந்தக் குழுவினர் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
இந்தக் குழுவினரிடம் முதலுதவி அளிப்பதற்குத் தேவையான கருவிகள், மருந்துகள், தூக்கிச் செல்லக்கூடிய ஆக்ஸிஜன் உருளைகள் ஆகியவை இருக்கும். இந்தக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்கள் அல்லது மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்குத் தேவையான முதலுதவியை அளிப்பார்கள்.
இந்த நடமாடும் மருத்துவக் குழுவில் சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் தன்னார்வத் தொண்டர்களாக உள்ளனர். கூட்ட நெரிசலில் இருந்து இந்தக் குழுவினர் வேறுபட்டுத் தெரிவதற்கு ஒளிரும் ஆடைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டும் சென்னை போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட உள்ளோம்.
டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி முதல் 12.15 மணி வரையில் ஒரே இடத்தில் பலர் செல்போன் உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளதால், அந்த சமயத்தில் அவசர அழைப்புகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இதனால், போலீசாரின் கம்பியில்லாத தொலைபேசி வழியாகவும் தகவல்கள் பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications