திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லாததால் தற்கொலை செய்த புதுப்பெண்!
சென்னை: மதுரவாயல் அருகே திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லவில்லை என்பதால் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மதுரவாயலை அடுத்து உள்ள ஆலப்பாகத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(39). தனியார் நிறுவன ஊழியர். அவருக்கும், கனிமொழி(29) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கனிமொழியின் அம்மா ஊரில் 3 நாட்கள் நடக்கும் கோவில் திருவிழா துவங்கியது. திருவிழாவிற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு அவர் வேல்முருகனிடம் கேட்க அவர் அழைத்துச் செல்லவில்லையாம்.
இதனால் கனிமொழி மனமுடைந்துள்ளார். இந்நிலையில் திருவிழாவின் கடைசி நாள் அன்று மனைவியை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேல்முருகன் முடிவு செய்தார். அவர் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் விடுப்பு எடுத்தார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்தபோது கனிமொழி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இகு குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிமொழியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி வெறும் 9 மாதங்களே ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications