For Daily Alerts
Just In
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Meteorological Department has said, next 24 hours rain in tamilnadu
Story first published: Thursday, August 11, 2016, 23:31 [IST]