சென்னையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவ வாலிபர் சிக்கினார்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
சென்னை: தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்புடன் சென்னையில் உள்ள இளைஞருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தவால்சாவடியைச் சேர்ந்தவர் சபீர். இவருக்கும் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து மூளை சலவை செய்யும் பணிகளில் ஐ.எஸ்.இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் சேர்ப்பு பிரிவின் மூலம் சேர்க்கப்படும் ஆள்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும், ஆயுத பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதேபோல் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கடந்த மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications