நீலகிரியில் பனிமூட்டம் அதிகம்.. 3 நாட்களுக்கு வருவதை தவிருங்கள்.. கலெக்டர் கோரிக்கை
3 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் கூறியுள்ளார்.
ஊட்டி: பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா வருவதை பொதுமக்கள் 3 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. கொட்டி வரும் கனமழையால் நிறைய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மரங்கள் வேரோடு பொத் பொத்தென்று சாய்ந்து விழுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை
நிறைய வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. கனமழை குறித்தும் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்தும் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்கப்பட்டது.

குன்னூருக்கு பாதிப்பு
அப்போது பேசிய ஆட்சியர், "நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக குன்னூர் பகுதி இந்த மழையினால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட வாய்ப்பு
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டாலும் மழை இன்னும் குறையவில்லை. அதோடு பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" இவ்வாறு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்மிடையே தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்
முன்னதாக வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியும், அரசின் முதன்மை செயலருமான சங்கர காந்த் பி.காம்ளே மற்றும் வருவாய்துறை, வனத்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications