நீலகிரியில் பனிமூட்டம் அதிகம்.. 3 நாட்களுக்கு வருவதை தவிருங்கள்.. கலெக்டர் கோரிக்கை
3 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் கூறியுள்ளார்.
ஊட்டி: பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா வருவதை பொதுமக்கள் 3 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. கொட்டி வரும் கனமழையால் நிறைய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மரங்கள் வேரோடு பொத் பொத்தென்று சாய்ந்து விழுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை
நிறைய வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. கனமழை குறித்தும் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்தும் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்கப்பட்டது.

குன்னூருக்கு பாதிப்பு
அப்போது பேசிய ஆட்சியர், "நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக குன்னூர் பகுதி இந்த மழையினால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட வாய்ப்பு
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டாலும் மழை இன்னும் குறையவில்லை. அதோடு பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" இவ்வாறு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்மிடையே தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்
முன்னதாக வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியும், அரசின் முதன்மை செயலருமான சங்கர காந்த் பி.காம்ளே மற்றும் வருவாய்துறை, வனத்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications