குரல் மாதிரி சோதனை.. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலாதேவி
குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர்.

நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.நிர்மலாதேவி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் இருந்ததால் பிரச்சனை பெரிதானது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். தமிழக அரசும் இதில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதே சமயம் இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்மலா தேவியை, சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்று மதுரை ஹைகோர்ட் கூறியது.
இந்த நிலையில் அவர் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆடியோவில் இருக்கும் குரல் குறித்து அவரிடம் சோதனை செய்யப்பட்டது. அவரின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் அவரின் குரல் மாதிரிகளை வைத்து, ஆடியோவில் இருக்கும் குரல் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பீட்டு பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அதேபோல் அவர் ஆடியோவில் பேசிய நபர்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை புழல் சிறையில் பேராசிரியை நிர்மலாதேவி அடைக்கப்பட்டுள்ளார். குரல் மாதிரி சோதனைக்காக அழைத்து வரப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மதுரை சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல்












Click it and Unblock the Notifications